Page 20 of 32
முட்டாளாயிடாத, நல்ல வாழ்க்கை, தேவா நல்லவன் அவனை நம்பு சரியா பயப்படாத”
“இல்லை அவர் வீட்ல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க”
“அவனையே வேணாம்னு வீட்டை விட்டு விரட்டிட்டாங்க, இதுல என்ன இருக்கு நினைக்க சொல்லு”
“கல்யாணத்துக்கு யார் யார் வருவாங்க”
“தெரியலை உன் பக்கம் நான் இருக்கேன், தேவா பக்கம் யாராவது வந்தா உண்டு இல்லைன்னா இல்லை”
“ஒருவேளை வைத்தி தாத்தா வருவாரோ” என அவள் சொன்னாள். அதைக்கேட்டு திகைத்த தாமரையும்
”வந்தா நல்லாதான் இருக்கும்” என பெருமூச்சு விட்டார்.
அங்கு தேவாவோ நகைக்கடையில் நகைகள் வாங்கி விட்டு அவசரமாக தாத்தாவிற்குப் போன் செய்தான்.
”ஹலோ தாத்தா”
“சொல்டா எங்க இருக்க எப்ப ஊருக்கு வர்ற”
”நான் வந்துட்டேன்”
“கீர்த்தனா எங்க?”
“பத்திரமா இருக்கா”