கீர்த்தனாவை பார்க்க அவளோ தலை குனிந்து இருக்கவும் அவளிடம் வா என சைகை செய்ய அவள் முடியாது என தலையாட்ட அவளையே ஏற இறங்கப் பார்த்தான் தாஸ், உடைகள் களைந்து முகம் சிவந்து ஒரு மார்க்கமாக இருந்தவளைக் கண்டு நடந்ததைப் புரிந்துக் கொண்ட தாஸ் தேவாவின் சட்டையை பிடிக்க
”டேய் நான் எதுவும் செய்யலைடா, நீ போன 10 நிமிஷத்தில என்னால என்னத்த செஞ்சிட முடியும் சொல்லு, அதுவும் ரோட்ல பட்ட பகல்லயா ஏன்டா விடு சட்டையை விடு” என சொல்ல அவனும் விட்டான்.
அதற்குள் தாமரை வரவும் அவரிடம் தாஸ் பல சைகைகள் செய்தும் அவர் புரியாமல் விழிக்கவே தலையில் அடித்துக் கொண்டு தாமரைக்கு கீர்த்தனாவைக் காட்ட அதற்குள் அவள் சரியாக உடைகளை சரிசெய்துவிட்டு நல்ல பிள்ளையாக இருக்கவே அதிர்ந்தான் தாஸ்
”என்னடா ஆச்சி உனக்கு, அவள் நல்லாதானே இருக்கா” என கேட்க தாஸோ வேறு வழியில்லாமல் தாலியை எடுத்து நீட்டினான். அதை வாங்கிய தாமரையோ
”புரியுது புரியுது வீடு பார்த்தாச்சி, இப்ப கல்யாணம் பண்ணாம எப்படி ஒண்ணா தங்க வைக்கறதுங்கற சரி சரி, முதல்ல வீட்டை சுத்தம் பண்ணி தேவையான சாமான்கள் வாங்கிப் போடுங்க, நான் ஜோசியர் கிட்ட போய் நல்ல நாள் குறிக்கறேன்” என சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டதும் தேவாவும் தாஸும் அந்த வீட்டின் ஓனரிடம் பேசி அட்வான்ஸ் கொடுத்து சுத்தம் செய்து வைக்குமாறு சொல்லிவிட்டு காருக்குள் ஏறினார்கள்
”இப்ப என்ன செய்றது தாமரை, சாமான்கள் வாங்கனும்ங்கற வாங்கிடலாம் உனக்கு கீர்த்தனாவுக்கு ட்ரஸ் வேணும்ல”
“ஆமாம் முதல்ல ட்ரஸ் வாங்கலாம்” என தாமரை சொல்ல தேவா அவர்களை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்றான்.
நால்வருக்கும் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டனர். கீர்த்தனாவுக்கு