”சரண்யா சரண்யா” என அழைக்க திகைத்தான் தேவா
”கீர்த்தனாவும் என் பொண்டாட்டித்தான்” என கோபமாக கத்த அதற்கு கைலாசநாதன்
“தெரியும் அந்த காலேஜ் ஓனர் சும்மா போன் பண்ணி இம்சை பண்றாரு. அதான்” என சொல்ல அதற்குள் சரண்யா வந்தாள்
”என்ன அங்கிள் கூப்பிட்டிங்களா”
“ஆமாம்மா ஒண்ணு அந்த ஹாஸ்டல்ல கட்ட முடிஞ்சா கட்டு இல்லையா விட்டுடு அந்த காலேஜ் ஓனர் எனக்கு போன் பண்ணி தொல்லை பண்றாரும்மா” என கேட்க அவளோ தேவாவை பார்க்க அவனோ வெறுப்பாகப் பார்த்தான்
”எதுக்கு இப்படி பார்க்கற, அவர் கேட்ட கேள்விக்கு நீதான் பதில் சொல்லனும், நான் இல்லை” என தேவா சொல்ல அதற்கு கைலாசமோ
”அவளை ஏன்டா அதட்டற” என
”ஓ இவளுக்கு நீங்க சப்போர்ட்டா, இப்ப கூட எனக்கு எதிராதான் இருப்பீங்க, கேவலம் அந்த ஹாஸ்டலுக்காக இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சி பாவம் கொட்டிக்கிறீங்கப்பா” என சொல்ல
”தேவா அப்படி சொல்லாதடா பாவம் அந்தாளு அதான் பார்க்கறேன். நாமளே தப்பு பண்ணா ஊருக்குள்ள என்ன நினைப்பாங்க”
“இப்ப மட்டும் ஊர் நல்லா பேசுதா என்ன”
“சரி விடு இப்ப நீ என்ன முடிவு பண்ணியிருக்க”