“சரிடா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கயேன் லீவு நாள்ல நீ கட்டிக்க மீதி நாள்ல நாங்க கட்டிக்கறோம்”
“பாதி பாதியா எப்படிப்பா வீடுன்னா சீக்கிரமா முடிஞ்சிடும், நான் கட்டிட்டு விட்டுடறேனே, அங்க பெரிசா ஆழமா அஸ்திவாரம் போட்டு கட்டி முடிக்கறதுக்குள்ள நான் வீட்டையே கட்டிடுவேன்” என சொல்ல அவரும்
”அப்படி சொல்றியா நீ, என்ன செய்றது இப்ப இல்லை இல்லை ஒரு 5 மாசம் பொறுத்துக்க, இன்னொரு பில்டிங் முக்கால்வாசி முடிஞ்சிருக்கு அதை 5 மாசத்தில நான் கட்டின பின்னாடி அங்கிருந்து ஆளுங்களை நான் ஹாஸ்டல் கட்ட கூப்பிட்டுக்கறேன். அதுவரைக்கும் உன் ஆளுங்க வந்தா போதும்”
“அப்படியா சரிப்பா நீங்களே பார்த்துக்குங்க”
“உன் ஆளுங்களை என்னால மேய்க்க முடியாது நீயே 5 மாசத்துக்கு இருந்து எப்படியாவது வேலையை முடிக்க பாரு. அப்புறம் நான் வந்து சேர்த்துக்கறேன்”
“அதுசரி அங்க இருந்தா நான் எப்ப என் வேலைகளைப் பார்க்கறது”
“சம்பளம் தரேன்டா”
“சம்பளமா இதப்பாருடா சரி எவ்ளோ தருவீங்க”
“உனக்கா? உன் ஆளுங்களுக்கா?”
“என் ஆளுங்களுக்கு நீங்களே தந்துக்குங்க, எனக்கு எவ்ளோ தருவீங்க”
“உன் இடத்தை ஏலம் எடுத்த தொகையை கொடுக்கறேன் போதுமா”