“நல்லா படிக்கிறேன்ங்கய்யா”
“என்னவாக ஆசைப்படற”
“எதுவும் இல்லைங்கய்யா”
”ஏன் தாமரை அப்படி சொல்ற, நீயும் நல்லா படிக்கறல்ல அப்புறம் என்ன” என அவர் கேட்கும் போதே தாமரையின் தந்தை மணி அங்கு வந்தார்
”ஐயா அதுக்கு எதுக்குங்க படிப்பு வயசுக்கு வந்த பின்னாடி கட்டிக்கொடுத்துட்டா என் பாரம் இறங்கும்” என சொல்ல
”சரி சரி அது உன் விருப்பம் கல்யாணம் பண்ண நினைச்சா என் கிட்ட சொல்லு, மொத்த கல்யாண செலவையும் நான் பார்த்துக்கறேன்” என சொல்ல வைத்தியோ
”எதுக்குப்பா கஷ்டம் அவளை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே செலவே இல்லாம” என சொல்ல அதிர்ந்தார்கள் அங்கிருந்த அனைவரும்
”வைத்தி என்ன பேச்சு இது”
“உண்மையை சொல்றேன் அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், பாருங்கப்பா எவ்ளோ அழகா இருக்கா இவளை போல நம்ம ஊர்ல அழகா வேற யார் இருக்கா” என சொல்ல அதற்கு மணியோ
”ஐயா என்னய்யா இது, நீங்க யாரு நாங்க யாரு, இது சரியா வராதுங்கய்யா நாங்க ஏழைங்க எங்களை விட்டுடுங்கய்யா” என சொல்ல வைத்திக்கு அதன் அர்த்தம் புரியாமல் தந்தையை பார்க்க அவரோ
”நம்மகிட்டதான் நிறைய பணம் இருக்கே அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தலைன்னா என்னத்துக்கு, நான் இருக்கேன் மணி எதுக்கு கவலைப்படற சின்ன பையன் ஏதோ