“உனக்கு இன்னுமா அறிவில்ல….நாங்க ரெண்டு பெரும் ஹனி மூன் வந்துறுக்கோம்….ஏன் இப்டி தொந்தரவு செய்ற….புரிஞ்சுட்டு நீயா விலகிப்பன்னு அவர் எதிர் பார்த்தா…..இப்டி அட்டை மாதிரி ஒட்றியே…..பணத்துக்காக தான வந்த….எவ்ளவு வேணுமோ கேட்டு வாங்கிட்டு போ….” என உளறினாள்….
இவளால் வர்ஷனை அப்படியெல்லாம் அப்போது கற்பனை கூட செய்ய முடியவில்லை….அதை அவனே இவளிடம் சொல்லும் வரை!!! அதுவும் எந்த சூழ்நிலையில் சொன்னான் அவன்….!!!!
ஆம் குழந்தை பிறக்க ப்ரசவ வலி எடுத்தநிலையில் அதை அவனிடம் சொல்வதற்காக இவள் அழைத்த போது அவன் அதை சொன்னான்…..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அதோடு “உனக்கும் உன் குழந்தைக்கும் எக்சக்கமா சொத்து எழுதி வச்சுறுக்கேன்…… நேஷன் க்ரூப்ஸ்ல உங்க ரெண்டு பேருக்கும் ஷேர்ஸ் உண்டு….நீ அடுத்த மேரேஜ் செய்துகிட்டாலும் இது எதுவும் மாறாது….எல்லாம் உனக்கேதான் இருக்கும்…” என்று பேரம் பேசினான்….
அதன் பின் அவனோடு என்னவென்று வாழ…????? பிறந்த குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு எங்கு செல்ல என தெரியாமல் நின்றவள் இன்று இப்படி மனோகரியின் வீட்டில்……
உண்மையில் காதல் என்று எதுமே இல்லையோ…? மாறிக் கொண்டே இருப்பது ஒன்றே மனமோ?
Friends இது penultimate எபியா அல்லது அடுத்த எபி penultimate ஆக அமையுமா என உறுதியாக சொல்ல முடியவில்லை….. ஆனால் இரண்டு எபிசோடுக்குள் முடிவு பெற்றுவிடும்…. நன்றி
தொடரும்!
{kunena_discuss:928}