நடவடிக்கைங்கள்ளெ ஒரு திருப்பம் வந்துட்டுது. செஞ்ச தப்புங்களெத் தெரிஞ்சிக்கிட்டாரு. வருத்தத்தோட 'தரித்திரம் புடிச்ச' சீட்டாட்டத்தெ விட்டுத் தொலெச்சாரு. முழுசா ஒரு வாரம் ராத்ரியும் பகலும் வீட்லேயே உக்காந்திருந்தாரு. அளவில்லாத சாந்தம், நல்ல குணம் கத்துக்கிட்டாரு நானியோட விளெயாடிக்கிட் டிருந்தாரு. இனி மாற்னது போதும்னு நினெச்சி ஒரு நாள் சாயங்காலம் மெதுவா என்னெக் கிட்டெ உக்கார வெச்சிக்;கிட்டு எவ்வளவு கனிவோட பேசனாரு தெியுமா! அது காதல் சரித்திரத்தலேயே ஒரு மிகப் புதுமையான கட்டம்! 'பானு! நான் முழுசும் மாறிட்டேன், நீ நம்பறியா?'ன்னு கேட்டார்.
'அந்த நம்பிக்கெ வர்றதுக்கு இந்த டைம் பத்தாதே!'
'பானு! நான் ஒரு அவசரக்கார மனுஷன்னு உனக்குத் தெரியாதா? என் தப்புங்களெ நீயே மன்னிக்கலேன்னா நான் என்ன ஆவற்து?'ன்னு தொடங்கி- 'நான் ஒரு விஷயம் சொல்றேன். என்னெத் தப்பா நினெச்சிக்காதே பானு? என் கஷ்ட சுகங்கள்ளெ நீயில்லேன்னா வேற யாரு பங்கெடுத்துக்கப் போறாங்க? இந்தக் குடும்பக் கடமெ உனக்கு மட்டும் இல்லியா? உண்மெயிலெ நான் கொஞ்சம் பணத்தெ வீணாச் செல வழிச்சிட்டேன்-நடந்த தென்னமோ நடந்துட்டுது. இப்பொ ஆயிரத்தி இரநூறு ரூபா கடன் இருக்குது. எப்படித் தீப்பேன் பானூ?"
"ஆயிரத்து இரநூரு?"
"நான் ஒண்ணும் அப்படி ஆச்சரியப் படலே. ஆயிரத்து இரநூறு தானா?ன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது. ஒரு குமாஸ்தா கிளப்பிலேயே குடுத்தனம் வெச்சிக்கிட்டா அருகதெ எங்கே யிருந்து வரும்னு நினெச்சே? இருந்தாலும் அவர் எத்தனெ ஊருங்க திரிஞ் சார்னு நினெக்கறே? தேவெ யில்லேன்னாலும் இண்டர் வீயூங்களுக்கு அப்ளிகேஷன் போட்றது---- அவங்க டி.ஏ. கொடுக்கறாங்கன்னு மேல ஒரு அம்பதோ, நூறோ கடன் வாங்கிட்டுப் புறப்பட்றது!
'ஏன் இப்படிக் கடன்வாங்கி ஊர்திரியணும்? இந்தக் கடன்களெத் தீக்கற சக்தி நமக்கு இருக்குதா?'ன்னு கேட்டா, 'இப்படி இல்லேன்னு ஜன்மத்தலெ வேற விதத்தலெ ஊருங்களெப் பாக்க முடியாது. கடன் தானாவே தீந்துபோயிடும்!'னு சொல்வார்.
அந்த ஊருங்க பாக்கணுங்கற ஆசெ எனக்கில்லே? உன் இஷ்டத்துக்கு நீ மட்டும் பாத்துக்கிட்டா என் கதி என்ன? பத்து ஊரு நீ மட்டும் சுத்திப் பாக்காம முக்கிய மான ரெண்டு மூணு இடங்களுக்கு ரெண்டு பேரும் சேந்து போகக் கூடாதா?
சிம்லாவிலெ இண்டர்வியூ வந்தப்பொ ரெண்டு நூறு கடன் வாங்கிட்டுப் புறப்பட்டாரு. உண்மெயிலே எனக்கும் காஷ்மீர் பாக்கணும்னு தோணிச்சி. தாஜ்மகாலெ வாழ்க்கெயிலே ஒரு தரமாவது பாக்கணும்னு சொல்றாங்க. குறெஞ்சது அந்த ஒரே ஓரிடத்துக் காவது என்னெக்