புலம்பறான் தெரியுமா? "
"அச்சச்சோ அவர் உங்ககிட்ட என்ன சொன்னார்?"
"என் பொண்டாட்டி என்னைக் காதலிக்கலைன்னு அழறான்."
அவள் முகம் சிவந்தது. இதையெல்லாமா அவளிடம் சொல்வது?
"உன்னோட நம்பிக்கையும் காதலும்தான் அவனை மேலும் மேலும் சாதிக்க வைக்கும்." என்றவள்
"புருசனும் பொண்டாட்டியும் நான் ஊருக்குக் கிளம்பற அன்னிக்குத்தான் இந்தக் கூத்து அடிக்கனுமா? என் புருசன் பாவமில்லையா? ஒழுங்கா இரண்டு பேரும் வந்து சேருங்க." என்ற மிரட்டலோடு கிளம்பினாள்.
அவள் போவதற்கென்றே காத்திருந்தவன் போன்று ரவிவர்மன் உள்ளே வந்தான். அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அவளிடம் தான் பேசியிருக்க வேண்டும். முதலில் அவள் மனதைப் புரிந்து கொண்ட பிறகு வாழ்க்கையை ஆரம்பித்திருக்க வேண்டும். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் கூச்சத்தினால் ஒதுங்கிப் போகிறாள் என்று நினைத்துவிட்டான். அதுவும் வீட்டினர் பார்த்து செய்யும் திருமணத்தில் வாழ ஆரம்பித்த பிறகுதானே புரிதல் அதிகமாகிறது. அதை நேரிடையாக கண்டிருந்தவன் அவன்.
அவன் திடீரென்று சிரித்தான். அவள் புரியாமல் பார்த்தாள்.
"போயும் போயும் அந்தக் குள்ளச்சியையா நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளனும்னு நினைத்தே? எதுக்கு நான் அவளை இடுப்பில் தூக்கிக் கொஞ்சவா?"
அவன் கேட்டதுதான் தாமதம்
"டேய் நான் இன்னும் போனை ஆப் பண்ணலை. லைன்லதான் இருக்கேன். என்ன தைரியம் இருந்தால் என்னை குள்ளச்சின்னு சொல்வே? சரி சரி போனால் போயிட்டுப் போறே. புருசனும் பொண்டாட்டியும் ரொமான்சை அப்புறம் வச்சிக்கலாம். என்னை என் புருசன் வீட்டிற்கு வழியனுப்ப உடனே வந்து சேருங்க." என்ற மிரட்டலோடு அது வரைக்கும் ரவிவர்மன் அங்கே நடப்பதை எல்லாம் கேட்பதற்காக ஆன் செய்து வைத்திருந்த அலைபேசி இணைப்பைத் துண்டித்தாள்.
இப்போதுதான் கயல்விழி யோசித்துப் பார்த்தாள்.
நெடுநெடுவென்ற உயரத்தில் இருக்கும் ரவிவர்மனின் அருகில் வினோதினி நின்ற தருணங்களை நினைத்துப் பார்த்தவளுக்கு அவன் பேசியதும் நினைவுக்கு வர சிரிப்பு வந்தது. சிரிக்கும் மனைவியை ஆசையுடன் பார்த்தான் ரவிவர்மன்.
அவனது பார்வையைக் கண்ட அவள் திடுக்கிட்டாள்.
அவள் அருகில் வந்தான். அவள் மனம் தடுமாறியது. நகர்ந்தாள். அவனும் அவள் கூடவே நகர்ந்து வந்தான். அவளைத் திருப்பியவன் அவளைப் பின்புறம் இருந்து அணைத்துக் கொண்டே அறையில்