கேட்டாள்.
“முஹலாயர்களின் புது வருட கொண்டாத்திற்குத் தேவையான பொருட்கள் விற்பனை நடக்கும். பெண்களுக்கு மட்டுமே அனுமதி. வாங்கவும், விற்கவும் என பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விழா”
“ஒஹ். நம் அரண்மனையில் உள்ளவர்களுக்கும் அனுமதி உண்டா அரசே?”
“நிச்சயம். நீங்கள் செய்த கலைப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்று விற்று வரலாம்”
“நல்லது அரசே”
ஜோதா ராணியிடம் பேசிக் கொண்டிருந்த அக்பரின் பார்வை கிரண் தேவியைத் தொடர, கிரண் தேவி அவர்களுக்கு முகம் காட்டவில்லை என்ற தைரியத்தில் , தன் தலையை ஆட்டிச் சென்றாள்.
அக்பர் அதைப் பார்த்து மீண்டும் புன்னகை செய்தார். பின் அவரின்
பொழுது ஜோதாவோடு கழிந்தது.
ஜோதாவின் அறையை விட்டு வெளியே வந்த ராணி கிரண் தேவி, தன் தோழி காமினியை நாடிச் சென்றாள்.
அவளின் அருகில் சென்றவுடன் “காமினி, நம் இளவரசரை பார்க்க வேண்டும்” என்று உரைக்க, காமினி அமைதியாக இருக்குமாறு எச்சரித்தாள்.
அதன் பின்னே சுற்றுபுறம் பார்த்த ராணி , சற்று தூரம் நடந்து யாருமில்லாத இடத்தில் சென்று நின்று கொண்டாள். காமினியும் ஏதோ எடுத்து வருவது கிரண் தேவியின் அருகில் சென்றாள்.
“நம் ஆம்பர் ராணியின் பணியாளர்கள் அருகில் இருந்தார்கள் ராணி. நல்லவேளை தங்களை அவர்கள் கவனிக்கவில்லை” என்றுக் கூறவும்,
“என் இந்த அவசரம் என்று தான் போகுமோ?” என்று கூறிய ராணி,
“காமினி, நம் இளவரசரிடம் ஒரு திட்டம் சொல்ல வேண்டும். அதற்கு வழி நாளை மறுநாள் நடக்கும் நோவ்ரோஜ் திருவிழா தான். ஆனால் அதில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. எப்படி அவரைச் சந்திப்பது?” என்றுக் கேட்டாள்.
“நானும் கேள்விபட்டேன் ராணி. அரண்மனை முழுதும் அந்தப் பேச்சுதான்” என்றவள்,
“தாங்கள் என்ன செய்ய எண்ணுகிறீர்கள் ராணி?” என்று வினவினாள்.
“நமக்குத் தேவையான விவரங்கள் கிடைத்து விட்டன காமினி. அதை அவரிடம் சொல்லி, ராணாவிடம் சேர்க்க வேண்டும். அதற்கு இந்த அரண்மனையை விட்டு வெளியே செல்ல வேண்டும்”