“மஞ்சு, ஒரு வழியா எழுந்துட்டீயா? சரியான கும்பக் கர்ணியா மாறிட்டப் போல இருக்கு! இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கீயே, எழுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்...”
“நைட் ரொம்ப நேரம் தூக்கம் வரலை அம்மு... அப்புறம் லேட்டா தூங்கினேன்...”
“மனோஜும் சொன்னார்...”
“அவர் எங்கே அம்மு? அவருக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா எதுவும் தெரியாது...”
“அப்புறம் எதுக்கு அவரை டிஸ்டர்ப் செய்யனும்னு நினைக்குற? வா, நீ சாப்பிடு...”
“ஹ்ம்ம்... மனோஜ் சாப்பிட்டாச்சா???”
“ஓ! நீ மனோஜ் சாப்பிட்டா தான் சாப்பிடுவீயா??? அந்த அளவுக்கு மாறிட்டீயா??”
“அப்படி இல்லைப்பா... அவர் ஒருவேளை எனக்காக வெயிட் செய்துட்டு இருக்காரான்னு தெரியனுமே அதுக்காக கேட்டேன்... எனக்கு ரொம்ப பசிக்குது... என்ன இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்...”
“உனக்குப் பிடிச்ச இடியாப்பம்...”
அமுதா மஞ்சுவின் கைப் பிடித்து அழைத்து சென்று உணவறையில் அமரச் செய்தாள்.
தோழிக்குப் பரிமாறி விட்டு அவளின் அருகேயே அமர்ந்தாள்.
“நீ சாப்பிட்டியா, அம்மு?”
“நான் எல்லாம் செவன்க்கு ஷார்ப்பா சாப்பிட்டுறுவேன் மஞ்சு...”