“சரா கிளம்பிட்டாரா?”
“ஹ்ம்ம்...”
“என்ன வீட்டுல சத்தமே இல்லை...?? உன் மதர் இன் லா எங்கே???”
மஞ்சு குரலை தழைத்துக் கேட்க, அமுதாவும், அதேக் குரலில்,
“ரூமுல இருக்காங்க. லயா அங்கே விளையாடிட்டு இருக்கா...” என்றாள்.
“ஒ, அப்போ சரி... நீ யார் கிட்ட பேசிட்டு இருந்த?? உன்னை டிஸ்டர்ப் செய்துட்டேனா?”
“அதெல்லாம் இல்லை மஞ்சு... ஆபீஸ்ல சின்ன வேலை... அதுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு இருந்தேன்...”
“பெரிய எஜமானியம்மா ஆயிட்ட!!!”
“நான் எப்போவுமே எஜமானி தான்...”
தொடர்ந்து தோழிகள் இருவரும் பல, பலக் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்...
இருவருக்குமே நேரம் போனதே தெரியவில்லை...
எதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்த அமுதா, துள்ளிக் குதிக்காத குறையாக எழுந்துக் கொண்டாள்.
“டைம் ட்வெல்வ் ஆகப் போகுது மஞ்சு! நீ இன்னும் டிஃபன் சாப்பிட்டுட்டு இருக்க!!! சீக்கிரம் சாப்பிட்டு முடி... நான் லயா பார்த்துட்டு வரேன்... அவளுக்கு சாப்பாடு தரனும்... தூங்கிடப் போறா...”