மஞ்சுவும் இணைந்து சிரித்தாள்...
மனோஜ் அவள் மீது வைத்திருக்கும் அன்பு எத்தனை பிரத்தியேகமானது என்பதையும் மஞ்சுவால் உணர முடிந்தது... அவளால் அவனை விட்டு விலகி இருக்க முடியாது... அதுவும் இப்போது, முடியவே முடியாது... அவனுக்கு கூடுதல் வேலை கொடுத்து விட்டதற்கு மானசீகமாக மனதில் மன்னிப்பு கேட்டு விட்டு அவன் வர காத்திருக்கத் தொடங்கினாள்!!!!
நீ மட்டும் இல்லை, உன்னோடு நானும் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதைப் போல வயிற்றில் இருந்த அவளின் குழந்தையும் மெல்ல அசைந்தது... அசைந்த இடத்தில் கை வைத்து உணர்ந்தப் படி கண்களை மூடி அந்த தருணத்தின் இனிய உணர்வில் ஆழ்ந்தாள் மஞ்சு!!!
“மஞ்சு, ஜூஸ் எடுத்துட்டு வரவா??” என்று அமுதா கேட்கவும், கண்களை திறந்து தோழியைப் பார்த்த மஞ்சு,
“அன்னைக்கு மெசெஞ்சர்ல மெசேஜ் அனுப்பி கலாட்டா செய்த... இப்போ திருட்டுத்தனமா பிளான் செஞ்சு செய்ற... உனக்கு கோல்மால் அமுதான்னு பேரை மாத்திடலாம்னு நினைக்கிறேன்...” என்றாள் சீரியஸாக!
“எப்படியோ, இரண்டு டைமும் உங்க இரண்டுப் பேரையும் சேர்த்து வச்ச புண்ணியம் எனக்குத் தான்...” என்றாள் அமுதா புன்னகை மின்ன...
பழைய நினைவுகள், புதிய நினைவுகளும் ஒன்றாக அலைமோத, அமுதா சொன்னதை ஏற்றுக் கொண்டு மஞ்சுவும் சிரித்தாள்...!!!
தொடரும்...