என்பது அப்போது தான் மஞ்சுவிற்கு உரைத்தது...
நேராக அமுதாவிடம் சென்றவள்,
“அம்மு, மனோஜ் எங்கே?? கலையில இருந்து அவரை நான் பார்க்கவே இல்லை... எங்கே இருக்கார்???” என்றாள்.
அவள் கேட்ட விதத்தில், சாப்பிட அழுது அடம் பிடித்துக் கொண்டிருந்த லயா கூட தன் அழுகையை நிறுத்தி மஞ்சுவைப் பார்த்தாள்.
ஆனால், அமுதா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை...
“இந்த டைம்ல நீ இப்படி டென்ஷன் ஆகக் கூடாது மஞ்சு... உட்கார்... நான் சொல்றேன்...” என்றாள்.
மஞ்சு அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றாள்...
“உட்காரு மஞ்சு...” என மீண்டும் சொன்னாள் அமுதா.
அரை மனதுடன் அமர்ந்தாள் மஞ்சு!
“அப்போவே போன் செய்யலாம்னு நினைச்சேன் அம்மு... அவரை தொல்லை செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்... அவர் சரா கூட ஆஃபீஸ் போயிருக்காரா என்ன??”
மஞ்சு மீண்டும் மனோஜ் பற்றி கேள்வி கேட்கவும், அமுதா வேகமாக யோசித்தாள்...
“ஆமா... சரா கூட தான் கிளம்பினார்...” என்றவள், சின்ன இடைவெளிக் கொடுத்து, “நீ இரு மஞ்சு... நான் இவளை தூங்க வச்சுட்டு வரேன்... தூக்கம் வந்து தான் அழுறா...” என்றாள்.
ஒன்றும் செய்ய வழி இல்லாமல், அமைதியாக அமர்ந்திருந்தாள் மஞ்சு...