“சிகாகோக்கு கிளம்பிட்டார் மஞ்சு...”
“என்ன சொல்ற??” மஞ்சுவின் அதிர்ச்சி கலந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த அமுதா, தோழியின் கையை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டாள்.
“முதல்ல உட்கார்...” கட்டாயப் படுத்தி தோழியை அமரச் செய்தாள்...
“மனோஜ் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கார் மஞ்சு... யார் யாரோ என்ன எல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தி விட்டு இருக்காங்க...”
அது மஞ்சுவிற்கும் தெரிந்த செய்தி தான்... அமுதா முழுவதும் சொல்லி முடிக்கட்டும் என பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தாள்...
“அவருக்கு தனியா உன்னைப் பார்த்துக்க பயம்... இப்போ இதுக்கு மேல இந்தியாவும் நீ போக முடியாது... அதான் என் கிட்ட ஹெல்ப் கேட்டார்...”
மஞ்சு இப்போதும் வாயை இறுக மூடிக் கொண்டு தோழியை பார்த்துக் கொண்டிருந்தாள்...
“உன் கிட்ட சொன்னா நீ வேண்டாம்னு சொல்வேன்னு அவருக்குத் தெரியும்... அதான் உன் கிட்ட சொல்லாம இங்கே அழைச்சுட்டு வந்தார்... நீ என்னோட இரு மஞ்சு... ட்யூ டேட் பக்கத்துல வரும் போது மனோஜும் இங்கே வந்திருவார்... அவருக்கும் பீஸ் ஆஃப் மைன்ட் கிடைக்கும்... உனக்கும் துணைக்கு நான் இருப்பேன்...”
“இது அவரோட ப்ளானா, உன்னோட ப்ளானா???”
“அவருது தான்... அவர் பக்கம் இருந்து பாரு மஞ்சு... பாவம் அவரு...”
தோழியை ஒரு உஷ்ணப் பார்வை பார்த்த மஞ்சு, பக்கத்தில் இருந்த மேஜையை சுட்டிக் காண்பித்து,