அவளுக்குள் பலக் குழப்பங்கள் வந்திருந்தது...
அமுதா ஏன் முதலிலேயே மனோஜ் சரவணனுடன் கிளம்பிச் சென்றதை சொல்லவில்லை???
இப்போதும் கூட பட்டும் படாமலும் தான் பதில் சொன்னாள்... என்ன நடக்கிறது???
மனோஜிற்கு போன் போட்டு அவரிடம் நேரடியாகவே பேசி விட்டால் என்ன??
அது தான் சரி என முடிவு செய்து மஞ்சு எழுந்துக் கொண்ட போது, அமுதா சொன்னதுப் போல திரும்பி வந்தாள்.
“எதுக்கு எழுந்து நிக்குற??? நான் தான் உட்கார்ந்து வெயிட் செய்யுன்னு சொன்னேனே, மஞ்சு??”
“அமுதா! என்ன விஷயம்?? மனோஜ் எங்கே இருக்கார்?? நானே அவருக்கு போன் போட தான் கிளம்பினேன்... நீ என் கூட வா... நானே மனோஜ் கிட்ட கேட்டுடுறேன்...”
அமுதாவும் குமாரிக்கு தெரியாமல் மஞ்சுவுடன் பேச விரும்பினாள். எனவே மஞ்சுவை தடுக்காமல், அவளுடன் சென்றாள்.
தான் தங்கி இருந்த அறைக்கு வந்த மஞ்சு தன் மொபைலை தேடினாள்...
“மஞ்சு, நீ மனோஜ்க்கு போன் போட வேண்டாம்... நானே சொல்றேன்... இங்கே வா... இப்படி உட்காரு... பேசலாம்...” என்றாள் அமுதா.
“விளையாடாதே அம்மு...”
“விளையாடலை மஞ்சு... மனோஜ் இங்கே இல்லை... அவர் காலையிலேயே கிளம்பிட்டார்...”
“எங்கே கிளம்பினார்???”