கண்டு சிரித்தார்
”நீயும் இங்கதான் இருக்கியா, நான் உன்னை பார்க்கவேயில்லை எப்படிப்பா இருக்க” என கேட்க தேவா இன்முகத்துடன்
”நான் நல்லாயிருக்கேன் தாமரை நீ எப்படியிருக்க” என பேர் வைத்து பேச அவருக்கு கூச்சமே வந்து
”இரு நான் போய் உனக்கும் இவனுக்கும் சேர்த்து பிரசாதம் கொண்டாரேன் எங்கயும் போயிடாத” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கீர்த்தனா அவனிடம்
”என்ன நீங்க அவங்களைப் போய் பேர் வைச்சி பேசறீங்க”
“நான் சின்னப்ப பாட்டின்னுதான் கூப்பிடுவேன். அவங்கதான் என்னை பேர் வைச்சி கூப்பிடச் சொன்னாங்க, 20 வருஷமா அவங்களை பார்க்கறப்ப இப்படியே கூப்பிட்டு பழகிட்டேன்.”
“ஏன் அப்படி சொன்னாங்க?”
“நான் என் தாத்தாவை போலவே சாயல்லயும் குணத்திலயும் இருக்கேனாம்”
“சரி அதுக்காக ஏன் அப்படிச் சொல்லனும்”
“தெரியலை இவ்ளோதான் சொன்னாங்க, எனக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும்”
“ஓ பக்கத்து வீடுங்கறதாலயா”
“அப்படியில்லை எனக்கு அவங்களைப் பிடிக்கும், அந்த வீட்ல இருக்கற மத்தவங்களை எனக்கு அவ்வளவா பிடிக்காது.”
“காரணம்“