”தேவா எதுக்கு கேட்கற” என கேட்க அவனோ
”இல்லை தாமரை சும்மா அவளை பாதுக்காக்க கேட்டேன்”
“வீட்ல என்னத்த பாதுகாப்பு வெளிய போனாதானே பாதுகாப்பு”
“தாத்தா என்னை வெளிய விடமாட்டாங்க” என கீர்த்தனா சொல்ல
“அப்புறம் என்ன” என பாட்டி கேட்க
“வீட்லதான் அவளை பார்த்துக்கனும்”
“முதல்ல போய் ரெடியாகி வா, டைமுக்கு வரலைன்னா டிபன் கிடையாது பட்டினிதான்” என பாட்டி சொல்லிவிட்டு திரும்ப தேவா பாட்டியை பார்க்க அவரோ வேறு பக்கம் முதுகை காட்டி நிற்கவும் சிரித்தபடியே கீர்த்தனாவிடம் நெருங்கினான்
”முத்தம் கொடுக்கவா” என கேட்க அவள் உடனே தன் உதட்டை கையால் மூடிக்கொள்ள சிரித்தான் தேவா
”இங்க கேமிரா இருக்கு தாத்தா பார்த்தா திட்டுவாரு”
“இங்க எதுக்கு கேமரா”
“யாராவது திருட்டுத்தனமா சமையல் பண்ணி சாப்பிடக்கூடாதுல்ல, இந்த வீட்ல எல்லாத்துக்கும் டைம் பிக்ஸ் பண்ணியிருக்காங்க”
“இது வேறயா ஆமாம் 9 மணிக்கு டிபனுக்கு இப்பவே சமைக்கற”
“இங்க இருக்கறவங்க ஆளுக்கு ஒன்னு சாப்பிடறாங்களாம், பாட்டி அதுக்கேத்த மாதிரி டிபன்