செய்றாங்க, எல்லாம் செஞ்சி முடிக்கவே எப்படியும் 9 மணியாயிடுமாம் அதான் பாட்டி கூட நான் உதவி பண்றேன்”
“நீ ஏன் உதவனும் வேலைக்காரங்க இருக்காங்களே”
“சும்மாவே வீட்ல இருக்க கூடாதாம், ஏதாவது வேலை செய்யலைன்னா தாத்தா திட்டுவாராம்”
“யார் சொன்னா?”
“தாத்தாதான்”
“அந்தாளு டாக்டரா இல்லை மிலிட்டரி ஆபிசரா”
”அதை அவரையே கேளு இப்ப நடையை கட்டு” என பாட்டி கத்த
”போறேன் தாமரை” என 2 அடி எடுத்து வைக்க பாட்டியும் திரும்பவும் வேறு வேலை செய்ய திரும்ப அவனோ கீர்த்தனாவின் இதழயே பார்க்க சட்டென தன் கையால் வாய் மூடிக்கொண்டு வெட்கப்பட்டாள் கீர்த்தனா. தேவாவோ சீலிங்கை பார்த்தான். அங்கு கேமரா இருக்கவே தலையில் அடித்துக் கொண்டே கேமரா முன் நின்று சிரித்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.
வேலையாள் அவனை அவனுக்கென்று ஒதுக்கிய அறையில் விட்டுவிட்டு சென்றுவிட உள்ளே சென்றவன் அங்கு தனது லக்கேஜ்கள் இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்து மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வசந்தனை பார்த்தான்.
”யார் பெத்த புள்ளையோ பாவம் இந்த வீட்ல வாக்கப்பட்டு சீரழியப்போகுது, தலையெழுத்து” என சொல்லி நொந்துக் கொண்டே மணியை பார்த்தான். 6 என காட்டவே
”9 மணிக்குதானே டிபன் போடுவாங்க 8.30க்கு எழுவோம் இப்ப தூங்குவோம் காபி வேற குடிச்சாச்சி தூக்கம் வருமா வராதா சும்மாவாவது படுத்திருப்போம்” என தன் சட்டையை