(Reading time: 48 - 95 minutes)

சாரி வாசல்ல நின்னு கூப்டு பார்த்தேன்…. ரெஸ்பான்ஸ் இல்ல…..ஃப்ரெண்ட் வீடுதான்னு உள்ள வந்துட்டேன்….” சொல்லிக் கொண்டிருந்த ராகாவின் கையை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள் ரியா…

“ஹே சாரி..சாரி ராகா….ஜஸ்ட் இப்பதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தோம்…. டைம் ஆகிட்டேன்னு அவங்களையும் சாப்ட சொல்லிட்டு இருந்தேன்…. அவங்க உங்க கூட சேர்ந்து சாப்டுறதா சொல்லிட்டு இருந்தாங்க…” என ஒரு விதமாய் சமாதானம் சொல்லி வரவேற்றாள்…

ராகா இப்போது ரியாவை கண்ணோடு கண்ணாய் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருந்தது….அதன் அத்தனை பொருளும் மகிழ்ச்சியே….

ராகாவின் பார்வை ரியாவுக்கும் புரியாமல் இல்லை…அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் சிறு வெட்கத்துடன் பார்வையை தரை தாழ்த்தினாள்….

பின் முறைப்படி  ரியுவும் விவனும் சென்று ஹாலிலிருந்த சிற்பியை வரவேற்று…..  அடுத்து உடனடியாக அனைவரும் சாப்பிடவும் உட்கார்ந்தனர்…..

“நான் பரிமாறிட்டு அப்றம் சாப்டுறேன்…”என நின்ற ரியாவை…. “அதெல்லாம் ஒன்னும் இல்ல…எல்லோரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தான்…..நாம சேர்ந்தே சாப்டலாம்…” என கட்டாயமாய் உட்கார வைத்ததை

சாப்பிடும் போதும்….” உனக்கு இது பிடிச்சுறுக்கா ரியு….?” என கேட்டுக் கொண்டதை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“அவளுக்கு எதுவும் டேஸ்ட் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கா….அதான் இப்டி….” என அவள் சாப்பிடும் டோக்ளாவுக்கு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ்டயே சாமாதானம் சொன்ன செயலை….  என விவனது ஒவ்வொரு செயலையும்….அதற்கு ரியாவின் ரெஸ்பான்ஸயும் கவனித்துக் கொண்டே இருந்த ராகா…

அடுத்து முறைப்படி தம்பதி சகிதமாய் ரியாவையும் விவனையும் நிறுத்தி அவர்களிடம் தாம்பளத்தில் வைத்து பத்திரிக்கை கொடுக்க…..என இன்விடேஷன் படலத்தை முடித்த பின்…

ஹாலில் இருந்த ஆண்கள் இருவரும் அவர்கள் அஃபீஷியல் சைடை அரட்டை அடிக்க துவங்கிய பின்….. ரியாவுடன் அவளது அறைக்குள் சென்றாள்…

தோழிகள் இருவரும்  மனம் விட்டு பேசிக் கொள்ளும் தருணம்….

“ரொம்பவும் அன்யூஃஸ்வல் பெக்யூலியர்…அண்ட் பெரிய ப்ராப்ளம் ரியா உன்னோடது…..இதுக்கு என்னதான் சொல்யூஷன்னு எனக்கே முதல்ல அவ்ளவு டென்ஷனா இருந்துது….. இப்ப உனக்கும் விவனுக்கும் இடையில எல்லாம் சரியானதும்….ப்ராப்ளம்ஸ் எல்லாம் முடிஞ்சு போனது போல இருக்கு…. ரொம்பவும் சந்தோஷமா இருக்கு” என தன் மன நிலையை  ராகா வெளிப் படுத்த…

கனவுகளை பத்தி பேசி ராகாவை குழப்ப விரும்பாமல் அதை தவிர்த்து மற்ற நிகழ்வுகளை சொல்லி….”தேவை இல்லாம நான் அவங்களை தப்பா நினச்சுட்டேன் ராகா….ஆனா நிஜத்துல அவங்க ரொம்பவும் நல்ல டைப்….” என ரியா விவனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்து

கூடவே அவன் அம்மா கண்மணி எல்லோர் விஷயத்தையும் சொல்லி….குழந்தைக்காக தன்னை மேரேஜ் செய்திறுக்கும் அவன் குணத்தையும் அவள் சொல்ல…..

அதில் சற்றாய் ரியாவின் மனநிலையை….தன்னை அவன் விரும்பவில்லை….குழந்தைக்கான இரக்கம் மட்டுமே தன் மேல் என்ற அவள் வலியை ராகா புரிந்து கொள்ள…

“நீ விவன லவ் பண்றதான ரியு…..அத அவங்கட்ட ஓபனா சொன்னியா…?” என வெளிப்படையாக ராகா கேட்டேவிட்டாள்….

“உன்ன முதல்ல பொண்ணு கேட்டு வந்தது அவங்க தான்…..வேண்டாம்னு சொன்னதுதான் நீ….இப்ப அவங்க என்னை லவ் பண்ணலைனு சொல்லிட்டு இருக்க….” அவள் இன்னுமாய் கேட்க

“அடுத்து அவங்க வேற பொண்ணு பார்க்க சொல்லிட்டாங்களாம் கண்மணிட்ட…அப்றம் அது இன்னும் இருக்குன்னு எப்டி சொல்ல….” என முனங்கினாள் இவள்…

“உனக்கு இஷ்டம் இல்லைனா என்ன செய்வாங்க…..காலம் முழுக்க கல்யாணம் செய்யாம இருக்கனும்ன்றியா…..இல்ல உன்னை கம்பல் பண்ணி தூக்கிட்டு போயிருக்கனும்ன்றியா….இதெல்லாம் ஒரு ரீசனா ரியா…?” ராகாவின் கேள்வி இது…

இப்பொழுது ஒரு பெருமூச்சு இழுத்துவிட்டுக் கொண்ட ரியா….

“நான் அப்ப ப்ரெக்னன்ட்டா இல்ல….. ஆனா இப்போ….? என்ன இருந்தாலும் நான் இப்டி இருக்கனே….” கடைசியில் தன் வயிற்றை சுட்டும் போது ரியாவின் கண்ணில் இருந்து நீர் எட்டிப் பார்க்க….

“தன் வைஃப் சுத்தமானவளா இருக்கனும்னு பொறுக்கி கூட எதிர்பார்ப்பான்….” எனும் போது எட்டிப் பார்த்த நீர் வெளி நடப்பு செய்திருந்தது….

அவளை இருகைகளோடும் பிடித்துக் கொண்டா ராகா இப்போது அதட்டினாள்…..

 “ அறிவே இல்லாம பேசாத ரியு….பொதுவா விவன் இடத்தில் யார் இருந்தாலும்…. அவங்கள மாதிரி ஒரு ரிச் பேக்ரவ்ண்டுக்கு…..ஒரு பொண்ணு அதுவும் அவங்க தங்கை மேரேஜ் அன்னைக்கு வந்து நின்னு…. நான் ப்ரெக்னென்டா இருக்கேன்…..நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகி இருக்குன்னு சொன்னா….அவங்க பக்கம் எந்த தப்புமே இல்லன்றப்ப…. அந்த பொண்ண எவ்ளவு மோசமா நினச்சுறுப்பாங்க…எதோ பணத்துக்காக கேவலமான கேம் ஆடுற மாதிரிதானே தோணும்…பட் உன்ன விவன் எப்பவாவது ஒரு சின்ன அளவு அந்த மாதிரி ட்ரீட் செய்துறுக்காங்களா?....உன்னைப் போய் தப்பா நினைப்பாங்க…அது இதுன்னு லூசு மாதிரி பேசிட்டு இருக்க…. விவன் உன்ன லவ் பண்றாங்கன்னு என் கண்ணுக்கு தெளிவா தெரியுது….உனக்கு அது தெரியலைனா….அவங்கட்ட மனசுவிட்டு பேசிப் பாரு…. “  இப்படியான ராகாவின் வார்த்தைகளின் பலனாய் ரியா விவனிடம் அடுத்து பேசப் போக…..

நடந்தது என்ன?????

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.