கனத்த இதயத்துடன், போனை அவள் எடுத்த போது ஜனனி அழைக்கிறாள் என்று வந்தது…
அவளிடம் தன் மனதை கொட்டி அழுது தீர்த்துவிட்டு, போனை வைத்தவள், மீண்டும் கட்டிலில் விழுந்து அழுதாள்….
அப்படி அவள் அழுது கொண்டிருக்கையிலே, அர்னவ் அவளுக்கு போன் செய்ய,
எடுத்த மாத்திரத்திலேயே தன் குரலை சரி செய்து பேச ஆரம்பித்தாள் அவள்…
“போன் பண்ணியிருந்தீயா?... கொஞ்சம் வேலை.. அதான்…”
“பரவாயில்லை….”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
“ம்ம்… சரி… எதும் முக்கியமான விஷயமா?...”
“ஆமா அக்கா போன் பண்ணியிருந்தாங்க….” என்றவள், சரயூ போன் செய்து பேசியதைப் பற்றி கூற, அவனும் மகிழ்ந்தான்…
எனினும் அவளது குரலில் இருந்த ஓர் சோகம் அவனது கவனத்தில் பட, இந்த நேரத்தில் அதை சொல்லலாமா வேண்டாமா என தயங்கினான்…
பின், ஒரு முடிவுடன்,
“உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்….” என்றான்…
“சொல்லுங்க....”
“நான்…..”
“சொல்லுங்க…. ஏன் தயங்குறீங்க?...”
“நான் வெளிநாடு போறேன்… இனி இந்தியா வரவே மாட்டேன்….”
அவள் தன் காதுகளில் விழுந்த வார்த்தையில் அப்படியே சிலையாகிப் போனாள் சில நிமிடங்கள்…
பின், சுதாரித்தவள், “கார்த்தி……. என்ன சொல்லுறீங்க?....”
என கலங்கியபடி கேட்க,
“ஆமா இதுதான் நான் உங்கிட்ட பேசுற கடைசி…..”
“கார்த்தி……………………………….”
துடித்துப்போனாள் அவள்…
அவனுக்கும் அங்கே வலிக்கத்தான் செய்தது… எனினும் என்ன செய்து மாற்றிட முடியும் இந்த வேதனையை….
“ப்ளீஸ்… கார்த்தி… போகாதீங்க… கார்த்தி…. ப்ளீஸ்…”
அவள் அழுது கெஞ்ச, அவனால் அதனைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை அதற்கு மேலும்….
“உன…க்…….கு…. மே….ரே…..ஜ் ஆகப் போகுது…… இனியும் நான் இங்க இருக்குறது சரியாப்படலை… அது நல்லதும் இல்லை…. சோ நான் போறேன் ச…..”
சகி என சொல்ல வந்தவன், அதை அப்படியே தனக்குள் புதைத்துக்கொண்டு,
“போறேன் ஜானவி… பை…..” என்றபடி அவன் தனது அழைப்பை துண்டிக்க,
அவளோ அப்படியே பிரம்மைப் பிடித்தவள் போல் நின்றாள், அதிர்ச்சியுடன்….
பின், சயநினைவுக்கு வந்து, அவனுக்கு போன் செய்ய, அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது….
சுவிட்ச் ஆஃப் செய்த தன் மொபைலை அப்படியே தூக்கி தரையில் வீசி விட்டெறிந்தான் அர்னவ்….
“சகி…. உன்னை அழ வச்சிட்டேனாடி…. சாரிடி…. சாரிடி என் சகி….”
அவன் இங்கே அழுது புலம்ப, அங்கே அவளும் அழுது கொண்டிருந்தாள்…
“கார்த்தி… ப்ளீஸ் கார்த்தி…. எங்கிட்ட வந்துடுங்க….”
“இல்லடி… நான் உன்னை சேர முடியாதுடி…. என்னை மன்னிச்சிடுடி…. என் சகி….”
“ப்ளீஸ் கார்த்தி.. நீங்க இல்லன்னா நான்…..”
“என்னை மறந்துடு சகி… மறந்துடு….”
அவன் நிலத்தில் மண்டியிட்டு கதறி அழ, அங்கே அவளும் அதே போன்ற கதியில் தான் இருந்தாள்….
அழுது அழுது இருவருக்கும் முகம் வெளுத்துப்போக, அவன் அப்படியே மௌனமாக தரையிலேயே படுத்து கிடக்க, இவளோ இங்கே எழுந்தாள் வேகமாக….
அறையில் அங்கும் இங்கும் தேடினாள் அவசரம் அவசரமாக….
அவள் தேடியதும் கண்ணில் பட, கைகளில் எடுத்துக்கொண்டாள் உடனேயே….
பார்த்ததும் புன்னகை அவள் இதழ்களில் தவழ, மறுநாள் விடியலுக்காய் காத்திருந்தாள் அவள் ஆவலுடன்….
தொடரும்
{kunena_discuss:995}