(Reading time: 35 - 70 minutes)

அதைப் பார்த்து வாயைப்பிளந்து நின்றாள் பெண், பருவம் எய்து மின்னிய இளம் காவ்யாவின் புகைபடங்களை மட்டும் அது சுமக்கவில்லை, அவளது சிறுமி பருவ வயது புகைப்படங்கள் தான் பெரும்பாலும் இருந்தது. அது அவளிடமே இல்லாத புகைப்படங்கள். இன்னும் ஏன், அவளேப் பார்த்திராதவை. திகைத்து நின்றாள். நாங்கு வயதில் அம்மாவின் கைப்பற்றி சிறிய பினோஃபாமில் அழுமூஞ்சியாய் பள்ளி சென்றது முதல், அவளது குறும்புகள் பலவற்றை பரைசாற்றும் புகைப்படங்கள் பார்க்க பார்க்க அலுக்காது, இன்னும் கண்ணுக்கு விருந்தாய் இருந்தது. ஒரு புகைப்படத்தில் ஒரு சிறிய குச்சியில் மண் புழுவைப் பிடித்து நிற்கிறான் இவளை விட சற்று பெரியவனாக காட்சி தந்த ரிஷி, இவள் அதற்கு பயந்துபோய் அருகே நின்ற அவளது தந்தையின் பேண்டில் முகம் புதைத்திருக்கிறாள். “கேடி, அப்போ என்ன சின்ன வயசிலயிருந்து ஃபாலோ பன்னினானா? ஐயோ காவீ, இவ்ளோ பேக்கா இருந்திருக்கீயே? “ என்று தலையில் அடித்துகொண்டாள், இறுதியாக இவள் வீட்டில் நைட் டிரஸில் உறங்கும்போது எடுக்கப்பட்டவை, அதிர்ந்துபோனாள், புகைப்படத்தில் விகல்பமில்லை எனினும் இவள் அறியாது எடுக்கப்பட்டவை, அது இவள் பிறந்தாள் கொண்டாடத்தின் இரவில் எடுக்கப்பட்டதற்கு அடையாளமாய் அருகே ஒரு பூங்கொத்து, இவள் ஒரு “வின்னி பூ சாஃப்ட் பொம்மையை” மார்பில் அனைத்து உறங்குகிறாள். “காட்” என வாய்விட்டு கூறினாள். இப்போது வெட்கமும் பயமும் மனதை நனைத்தது. காவ்யா தன்னுடைய அறையிலேயே ஆடை மாற்றும் பழக்கமுள்ளவள் அதை நினைவு படுத்தும் விதமாய், உறங்கும் அவள் படுக்கை அருகே அவள் கழைந்துபோட்ட பிறந்தநாள் ஆடை அதுவும் புகைப்படத்தில் பல் இழித்தது.

கணினியை அனைக்க நினைத்தவள் கண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ, தனித்து இருந்த அந்த ஃபோல்டர் திறந்தபோது, ஒரு கர்பிணிபெண் அருகே ஒரு இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன், அந்த தாயின் கண்களில் தான் எத்தனை காந்தம், அவளருகே அவள் தோளை தழுவி நிற்கும் அவள் கணவன். இருவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம், இது தான் ரிஷியா, இது அவங்க அம்மாவா? ஆனால் ரிஷியின் சாடையில் இல்லை அந்தப் பையன், அந்த கர்பிணியின் முகம் இப்போது இவள் நெஞ்சில் விரிந்தது, “எங்கேயோ பார்த்த முகம், அந்த பெண்ணின் இளம் வயது முகம் காந்தமாய் இவளை கவர்ந்தது. வெகு நேரம் அதனையேப் பார்த்திருந்தாள், தீடிரென்று அது யாரென ஞாபகம் வர, இவள் உடல் நடங்கியது ‘வனிதா ஆன்ட்டி’ இப்போது மூளையின் மொத்த நியூராங்களும் விழித்துக் கொண்டது, இந்த சிறுவன் இளமாறன், வனிதா ஆன்ட்டியின் வயிற்றில் இருப்பது செல்வி” காவ்யாவிற்கு குழப்பம் அதிகரித்தது, இந்த புகைப்படத்தை ஏன் ரிஷி பாதுகாக்கிறான்?,. அதற்கு பின் உள்ள கோப்புகள் யாவும் முகவும் பாதுகாக்கப்பட்டிருந்தது,  இவளால் அதனை திறக்க முடியவில்லை. ஆனால் சித்தம் கலைந்திருந்தது, இறுதியாக படு இளமையாக ரிஷியின் ஒரு ஸ்நாப் அதனைத் திறந்தாள், இதழோடு கண்களும் புன்னகைக்க நின்றிருந்தான், அதனை கண்களில் வாங்கி, இதயத்திற்கு கொடுத்தாள், கேட்பதற்கு நிறைய கேள்விகள், ஆனால் மனம் இப்போது ரிஷியைப் பார்க்க நினைத்தது. கணினியை அனைத்தாள் அருகே இருந்த பீம் பேக்கிற்குள் சாய்ந்து படுத்து கண்கள் மூடிக்கொண்டாள்.

வ்வளவு நேரம் உறங்கினாளோ அவள் கண் விழிக்கும்போது அவளது கவுச்சுக்கு அருகே ஒரு சின்ன ஸ்டூலைப்போட்டு கைகளால் கன்னத்தை தாங்கி இவளையே கவனமாய் பார்த்திருந்தான் ரிஷி, அறை சில்லிட்டிருந்தது இவள் மேல் ஒரு மென் வெள்ளை போர்வை விரிந்து உடலில் மென் சூட்டைப்பரப்பியிருந்தது. இவள் விழித்ததும் புன்னகைத்தான், “தூக்கம் வந்தா தூங்கு காவீ கொஞ்ச நேரம் களிச்சு கிளம்பளாம்!” அறையில் மென் விளக்குகள் மட்டும் ஒளிர்ந்தது. “காவீ முழுச்சுக்கோ இவன் ஓசில சைட் அடிக்கிறான்” என்று தெளிவாய் அறிவுறுத்தியது அறிவு, ஆனால் நல்ல தூக்கம் கலைய அவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் தான். ஆனால் தன்னை உலுப்பி அவசரமாக எழுந்தவள் அவள் படுத்திருந்த கவுச்சுக்கு கீழேயிருந்த மேட்டின் நுனியில் கால் வைக்க அது வழுக்கி, தேமே என இவளைப்பார்த்திருந்தவனின் மேலேப்போய் விழுந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில், இவளுடைய வலதுகால் விரல்கள் மடங்கி வேதனை ஏற்படுத்தியது, முன்னே சரிந்து அவனது தோள்களின் மேலே கைகளை மாலையாக்கி அவன் மேல் சரிந்து, “காவீ பார்த்து ஸ்லிப் ஆக..போகுது” என் சொல்லிகொண்டிருந்தவனின் மார்போடு சாய்ந்து வந்து விழுந்தாள், “போதாதா, இவ்வளவு நேரம் அவன் மனம் கட்டுப்பாட்டில்தானிருந்தது, இப்போது அதன் தளை உடைந்து தன் கட்டுபாடு இழந்தது பின்னால் விழுந்தவனின் தலை எதிலோமோதி நச்சென்று தரையில் இடித்தது. வலிக்கத்தான் செய்தது. இவளோ எழமுடியாது இவன் மேல் இன்னும் சரிய, “சாரி சாரி ரிஷி..” என்றவாரே எழ நினைத்தாள் பெண்.

முடிந்தால் தானே, அவளது ஐம்பத்தைந்து கிலோ இடை இவனுக்கு பூமெத்தையாய் கனத்தது, அவன் கைகள் இன்னும் அவன் தலைக்கு மேல் தான் இருந்தது, அவன் கைகள் தொடவில்லை, ஆனால் வெகு அருகே அவன் மூச்சுக்காற்று பெண்ணின் மேனிமீது பட்டு தெரித்தது. அவன் இன்னும் தலையைத்தூக்காது கண்கள் மூடிதான் கிடந்தான். அவனது தலைக்கு பின்னே கைகளை அழுத்தி ஊன்றி எழும்போது,  அவன் கண்கள் மூடிக்கிடந்தது இவளுள் புயலைக்கிளப்பியது. அவனது இடப்பக்கம் சரிந்து எழுந்தாள் கால் இன்னும் வேதனையாய் வலித்தது. அருகே உருண்டிருந்த ஸ்டூலை இழுத்து அதில் அமர்ந்தாள். அவன் கண் விழித்துப்பார்த்தான் ஒரே துள்ளலாக எழுந்து இவள் அருகே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.