சுமையை முதுகில் சுமந்து ஊர்ந்து போகும் ஆமையென, அவ்வபோது கூட்டினுள் முடங்கிக் கொள்ளும் நத்தையென அவள் வாழ்வில் வண்ணப் பட்டாம்பூச்சியின் வானமாய் அவன் பிரவேசம்.
பன்னிரண்டு ஆண்டுகள்!!!
மேடு பள்ளங்கள், தடைகள், வறட்சி அத்தனையையும் தாண்டி அவன் கரைகளிலே ஜீவநதியாக அவள் வாழ்வோட்டம்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவள் வறண்டு போகும் போது குறுகி, பொங்கி எழும் போது விரிந்து என அவளின் அணையாய் தொடரும் அவன் பயணம்.
ஏதோ ஒரு கடலில் சங்கமிக்கும் வரை தானே கரையோடு நதியின் பந்தம்??? இது வாழ்வின் நிர்பந்தம் அன்றோ!!!
அப்படி இல்லை.
பிரபஞ்ச வெளியில் இணைப்பாதைகளில் செல்லும் இரு அலைக்கதிர்களின் வரைமுறை இல்லா வரையறையற்ற பயணம் அவளோடு அவன் சொந்தம்.
அவன் மேல் அவளும் அவள் மேல் அவனும் கொண்டிருக்கும் உணர்வு. எந்த உறவிற்குள் அடங்கி விடக் கூடும் இவர்கள் பிணைப்பு!!! அன்பு, நேசம், பாசம், பக்தி, பரிவு, நட்பு, காதல் என்ற எண்ணற்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் முற்றுப் பெற்று விடுமா!!!
எல்லாவற்றிற்கும் ஓர் முடிவு உண்டு. அனைத்திற்கும் எங்கேனும் ஓர் முற்றுபுள்ளி உண்டு. இது இயற்கையின் நியதி எனில் இவர்களது பயணத்தின் எல்லை??
முடிவிலியின் முடிவினிலே!!!
(AT THE END OF INFINITY)
சில்சீயில் என் மூன்றாவது கதையை நிறைவு செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இந்த வாய்ப்பை கொடுத்த சில்சீ மற்றும் தொடர் முழுவதும் கமண்ட்ஸ் மூலம் எனக்கு ஊக்கமளித்த வாசக தோழமைகள் அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
முடிவிலியின் முடிவினிலே!!!
(AT THE END OF INFINITY)
{kunena_discuss:1137}