(Reading time: 36 - 72 minutes)

அர்ஜூனின் ஆறடி உயரத்துக்கு சரியாக இருந்த அவனுடைய குறுத்தா அவளுக்கு மிகவும் லூசாக இருந்தது.இன்னும் அவள் நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் சூடாக பால் கொடுப்போம் என்று அதை கொண்டு வந்து குழந்தையை போல் தன்மேல் சாய்த்து புகட்டினான்.ஆனால் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டு நடுங்கினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஜன்னல் வழியாக காற்று வேகமாக அடிப்பதால் நடுங்குகிறாளோ என்று அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் கதவுகள் அனைத்தையும் சாற்றி வந்தான்.பேனை ஆப் செய்து விட்டு இரண்டு மூன்று கம்பளியை அவள் மேல் போட்டான் போதையில் மழையில் நனைந்ததால் அவள் உடலில் சூடு ஏறாமல் நடுங்கி கொண்டே இருந்தாள்.

வெளியில் பெய்த மழையும்,உள்ளே சென்ற போதையும் மதி இழக்க செய்ததுடன்.சுவாதியின் அழகு அவனை நிலை இழக்க செய்து அர்ஜூனின் கட்டுபாடுகளை தகர்த்தெறிய செய்து சுவாதி என்னவள் என்ற உரிமையை எடுத்து கொள்ள வைத்தது.

ஆம் பெரியவர்களின் ஆசிர்வாதம் இல்லை,சிவன் சக்தியின் அம்சமாக இருக்கும் திருமாங்கல்யம் அவளின் கழுத்தில் ஏறாமல்,சுய நினைவு இல்லாமல்,இவ்வளவு நாட்கள் தன் தாய் கூட பார்த்திராமல் தன் பெண்மையை பொக்கிஷமாக எவன் கைகளில் முழு மனதுடனும் காதலுடனும் தர வேண்டும் என்று பொத்தி பாதுகாத்து வைத்தாளோ,அவனே அவளது விருப்பம் தெரியாமல் அவள் மீது படர்ந்து அவளை முழுவதுமாக ஆண்டு முடித்தான்.

நாட்டின் கடை கோடியில் பூத்த சுவாதி என்னும் மலர் தலைநகரான சென்னையில் பிறந்து வளர்ந்தவனின் தோளில் மாலையாக மாறியது.வெளியில் மழை தன் ஆதிக்கத்தைகாட்ட உள்ளே அர்ஜூன் சுவாதியிடம் தன் ஆதிக்கத்தைகாட்டி கொண்டு இருந்தான்.

காலையில் கனத்த தன் தலையை கையில் தடவியவள்.தன் இடையில் கனமாக ஒரு பொருள் கிடப்பதாக நினைத்து தொட்டு பார்த்தாள்.அது ஒருவனின் கை என்பதை அறிந்து கையை வெடுக்கென தள்ளி துள்ளி எழுந்தாள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் உணர்ந்தாள் தன் நிலையை.

போர்வையை நன்றாக சுருட்டி தன்னை மூடி கொண்டவள் பக்கத்தில் பார்க்க இதழில் வசீகர சிரிப்புடன் அர்ஜூன் படுத்திருந்தான்.என்ன முயன்றும் முடியாமல் தன்னிலா நினைத்து அழுதாள்.கைகளை அவள் தள்ளிய வேகத்திலும் சுதியின் விசும்பல் சத்தத்திலும் கண் விழித்த அர்ஜூன் அவள் இருந்த கோலத்தை பார்த்து வேறு புறம் திரும்பி கொண்டான்.

சுவாதியின் விசும்பல் சத்ததில் அவளிடம் பேச வேண்டும் என்று திரும்பியவன் அவள் அதே கோலத்தில் இருப்பதை பார்த்து சா....ரி சாரி வது.ஒரு நிமிடம் நான் இதோ வருகிறேன் என்று அவளை பார்க்காமல் அறையில் இருக்கும் பாத்ரூமில் அவன் இரவு காய போட்ட அவளது உடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.இதை போட்டு கொண்டு வா உன்னிடம் பேச வேண்டும் என்று அறையைவிட்டு வெளியேறினான்.

சென்றவனையே கண் இமைக்காமல் பார்த்தவள். காப்பாற்றுவாய் என்று உன்னை நம்பி வந்தேன்.ஆனால் நீயும் மற்ற ஆண்களை போல்தான் என்று நிறுபித்துவிட்டாய்.ஆண்கள் அனைவருமே சந்தர்பவாதிகள்தானா?உன்னை போய் காதலித்தேனே இப்போது அதை நினைத்து வெட்கபடுகிறேன். இந்த நிமிடம் நான் இந்த உலகத்தில் அதிகம் வெறுப்பது உன்னைதான் உன்னை மட்டும்தான்.

அக்காவை காதலித்தவன்.எந்த உரிமையில் என்னை தொட்டான் நானே தேடி வந்ததாலா?எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் என்று மனதுக்குள் கணன்று கொண்டு இருந்தவளின் முன்பு டீயை கொண்டு வந்து வைத்தான்.

அர்ஜூனையே வெறுப்புடன் பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல்,தலையை குனிந்து கொண்டு நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்,நீ இரவு குளிரால் ரொம்ப நடுங்கினாய் என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே,அவன் கொண்டு வந்து கொடுத்த டீ கப் சிலீர்.........என்ற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது.       

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1236}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.