(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டார்களா?”

ஆமாம்… “

இப்போது ஓரளவிற்கு அவனால் அன்றைய சூழலை… அங்கிருந்த சைக்கலாஜிக்கல் அதிர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. கதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் துரோகம் அவரை மிகவும் பாதித்திருக்கும்விசயம் வெளியே தெரிந்து விட்டால் அவருடைய செல்ல குழந்தைகளின் எதிர்காலம் அவமானகரமாக இருக்கும் என்று நினைத்திருப்பார். மனம் அதிர்ந்து போயிருக்கும்போது மூளை செயல்படாது. சாதகமான நல்ல விசயங்கள் நினைவிற்கு வராதுஅதுதான் அந்த சோகமான முடிவிற்கு காரணமாக  இருந்திருக்கும்.

அக்கா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் பிரமாதமான விளையாட்டு வீராங்கணையாக இருந்திருப்பாள். அவள் ரொம்பவும் தைரியமானவளும்கூட போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர்ந்திருப்பாள்.”

ஓகே கேட்கும் எனக்கே சங்கடமாக இருக்கிறது. உனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கும். நாம் தூங்கலாமா. குட் நைட்!” அவன் படுத்தான்.

குட்நைட்சொல்லும்போதே அவள் கண்களில் சிறு கேலி ஒளிர்ந்து மறைந்தது. வரப்போகும் எதையோ நினைத்து சிரிக்கிறாள்வேறு என்னஅவன் கூனி குறுகி பரணின் சுவரை ஒட்டிக் கொண்டு படுக்கப் போவதைத்தான் நினைத்து பார்த்திருப்பாள்.

எல்லாம்  அவனுடைய தலையெழுத்துஒரு பக்கம் மனிதரில் மாணிக்கம் என்றும் சொல்லிக் கொள்கிறாள்மறுபக்கம் இப்படி கலாய்க்கவும் செய்கிறாள்லெட்ஸ் ஸீ!

மறுநாள் விடியும்போது நேற்றுபோலவே இனிமையாக இருந்தாலும் ஒரு வெறுமை வர ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாட்களா என்ற பயம் துளிர் விட்டது. அவனுக்கு இப்போது இரண்டே சாய்ஸ்தான்ஒன்று அதிதியின் மனதை மாற்றியாக வேண்டும் இல்லை அவன் தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டு அடுத்த அட்வென்சருக்கு தயாராகணும்!

என்னாச்சு கொஞ்சம் டல்லாக இருக்கீங்க!”

இங்கே சோம்பேறித்தனமாக இருப்பதுபோல உள்ளது. நான் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பவன். கொஞ்சம் போர் அடிக்கிறது

அப்படின்னா நாம் இன்றைக்கு காட்டின் உள்பகுதிக்கு போகலாமா. அது மலைப்பகுதியின் அடிவாரம். ஒரு அருவிகூட இருக்கு. பழ மரங்கள்  நிறைய இருக்கு. அப்புறம் ஒரு காட்டு கோவில்கூட இருக்கும். போகலாமா

ட்ரெக்கிங் போறதுபோலவா. ஓகே செய்யலாம். அந்த ஜிபிஎஸ் கருவியை மட்டும் கையோடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.