(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ராகவ்விற்கு அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்க மதியம் லஞ்ச் பிரேக்கில் அவளை தேடினான். ஆனாலும் அவனது கண்களில் அவள் படவில்லை.

சாயங்காலம் வகுப்பு முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறி கொண்டிருக்க தனது ட்ராயிங் வகுப்பறைக்கு செல்வதற்காக நுழைந்த ராகவ் மரத்தடியில் அமர்ந்திருந்த குழலியை பார்த்தான்.

அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ள வகுப்பறைக்குள் செல்லாமலேயே தனது பேக்கை எடுத்துக் கொண்டு குழலியின் அருகில் வந்து அமர்ந்தான் ராகவ்.

ஹாய் குயிலி ‌...எப்படி இருக்க..

பதில் ஏதும் பேசாமல் அவனை பார்த்து சிரித்தவள் நீ வீட்டுக்கு போகலையா என்றாள்.

போகணும்... நீ ஏன் போகல

எனக்கு உன்னைப் போல வளரணும் ஆசை. அதான் இந்த மரக்கிளையை பிடித்து கொஞ்ச நேரம் தொங்கலாம் என்று இங்கே உட்கார்ந்துட்டேன் .

அவள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும் அதை மறுக்காமல் அப்படியா ஷாட்டா இருந்ததாலும் க்யூட்டாக தா இருக்குற என்றான் ராகவ்.

பதிலேதும் பேசவில்லை... மாறாக உனக்கு குயிலி என்று யாரையாவது தெரியுமா என்றால் குழலி.

தெரியாது ஆனா அன்னைக்கு உன்னைப் பார்த்ததும் குயிலினு தெரியாமல் சொல்லிட்டேன். ஆனா அதற்கு என்னாமா ஒரு ஆக்டிங் கொடுத்த... நானே பயந்துட்டேன் போ என்று பயந்தது போல முகத்தை மாற்றினான் ராகவ்.

ஹாஹா என்று வாய் விட்டு சிரித்தவள் மீண்டும் ஏதோ யோசனையில் இருக்க எப்ப பார்த்தாலும் நீ இப்படிதான் யோசித்துக்கொண்டே இருப்பியா என்றான் ராகவ்.

யோசிக்கிறதற்கு என்ன இருக்கிறது இந்த இடத்தில் என்று எளிதாக சொல்லி முடித்தாள் அவள். ஆனாலும் அவள் மனமோ யோசனையுடன் அவனை பார்த்து கொண்டே இருந்தது.

நான் உன்னை குயிலே என்று கூப்பிடலாமா..

ம்ம்ம்.. அப்படியே கூப்பிடு. நீ அப்படி கூப்பிடும் போது என்ன சுத்தி நிறைய பேர் இருக்கிற மாதிரி இருக்கு.

ஓ...சரி உன் அப்பா அம்மா என்ன பண்றாங்க.

அப்பா அம்மாவா.... அவங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. அவங்க இல்லை என்று மட்டும் தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.