Page 12 of 12
அப்படி அவளுக்கு வேறு ஒருவனை மாப்பிள்ளையாக கொண்டு வந்தாலும் அவன் எப்படியிருப்பானோ? அதற்கு இவன் பரவாயில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் எப்படியோ? மற்றவர்கள் பேச்சிலிருந்து அவன் நல்லவன் தான் என்று தெரிகிறது. அவன் வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக போக்கிவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.அவர்கள் மகிழ்ச்சிக்காக அவள் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவள் மனதில் வலுத்தது.
பிறகு தானே இந்த முடிவை நினைத்து ஒருநாள் வருத்தப்படப்போகிறோம் என்றறியாமல் தனதறைகு நிம்மதியாக சென்றாள்.
வளரும்............