Unakkagave naan vazhgiren - Tamil thodarkathai
Unakkagave naan vazhgiren is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty sixth serial story at Chillzee.
முன்னுரை
அன்பிற்காக ஏங்கும் நாயகிக்கு அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்ததா தனிமையில் வாடிய அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்ததா தனக்கான அன்பை அவள் எப்படி அடைந்தாள் என்பதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 01 - சசிரேகா
”நானும்தான் தனிமையில வாடி வதங்கறேன், பகலெல்லாம் நிக்க நேரமில்லாம வேலை அது இதுன்னு ஓடி நேரத்தை ஓட்டினாலும் இரவு வந்தாலே எனக்கும் பயம் வரும், எப்படா இரவு முடியும் எப்ப பகல் வரும்ன்னு தோணும், உன்னைப் போலத்தான் என்னோட தனிமையும் எனக்காவது அப்பா அம்மா இருக்காங்க ஆனா, உனக்கு அது கூட இல்லை. எனக்கு
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 02 - சசிரேகா
“அப்பா அம்மா சொல்றதை இப்ப வாச்சும் கேளுங்க, இந்த வீட்டு சம்பந்தம் கூட பெரியப்பாதான் முடிவு பண்ணாரு, இப்ப நம்மால யார்கிட்டயும் பேசமுடியாது, பேசினாலும் நம்ம பேச்சு எடுபடாது அமைதியா இருங்கப்பா, நடக்கறத வேடிக்கை பார்க்கலாம், எத்தனை முறை நம்மளை அவமானப்படுத்தினாங்க, ஒரே வீட்லயே 2 சமையல் நடக்குது,
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 03 - சசிரேகா
இரு பெண்களின் அழுகையை நினைத்து சமாதானம் செய்ய விரும்பாமல் பொறுமையாக அவர்களின் கண்ணீர் ஓயும் வரை காத்திருந்து மித்ராவின் பக்கத்தில் அமர்ந்தான் அடுத்த நொடி அவனை கட்டியணைத்தவள் ”தாங்கஸ் எனக்கு அம்மாவே திரும்பி வந்தமாதிரியிருந்துச்சி. தாங்ஸ் நண்பா” என்றாள் மித்ரா. அதைக் கேட்டு சிரித்தாலும் அவளை
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 04 - சசிரேகா
நீங்க என்கிட்ட சொல்லிட்டு போனா என்னால தாங்க முடியாது. சின்ன குழந்தை போல உங்களை போகவிடாம பிடிவாதம் பிடிப்பேனோன்னு தோணுது. யாரோ நீங்க எனக்காக ஒரு நாள் இருந்தீங்க, என் உணர்ச்சிகளை புரிஞ்சிக்கிட்டீங்க, நண்பனா என்கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டீங்க, என்னோட உணர்ச்சிகளுக்கு ஆசைப்பட்டு நட்பை
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 05 - சசிரேகா
என் மேல இளா இரக்கப்பட வேணாம் எப்படியோ நான் இத்தனை வருஷமும் சுயமா நின்னு வாழ்ந்துட்டேன். இப்ப எனக்கு ஒரு துணை வந்தா என்னோட பலம் போயிடும் எல்லா விசயத்துக்கும் அவரையே நான் சார்ந்து இருக்கற மாதிரி மாறிடுவேன், திரும்பவும் அந்த துணை என்னை விட்டு போயிடுச்சின்னா நான் மறுபடியும் பழைய படி மாறித்தானே
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 06 - சசிரேகா
”நல்லா நாடகமாடறீங்க உங்க பொண்ணு செழியனை காதலிச்சா அவனுக்காக அவள் முயற்சி செய்ஞ்சா அவனுக்காகதான் என்னை வேணாம்னு சொல்லி நிச்சயத்தை நிப்பாட்ட சொன்னாள் அவள் சொன்னதும் நானும் நிப்பாட்டினேன். அவளும் இது நாள் வரை செழியன்கிட்ட தன் காதலை ஏத்துக்க சொல்லி கெஞ்சிக்கிட்டு இருந்தா கடைசியா உங்களுக்கும் விசயம்
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 07 - சசிரேகா
”இளா ஒரு ஐடியா சொல்ல அது போல அந்த பொண்ணை வெறுப்பேத்த நினைச்சி நான் இப்படி வந்தேன். இது போல அவர்தான் வரச்சொன்னாரு. கூடவே ப்ரெண்டஸ்களையும் கூட்டிட்டு வரச்சொன்னாரு. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடிக்க சொன்னாரு. நானும் கொஞ்சம் பந்தா காட்டினேன் ஆனா இங்க வந்தபின்னாடி 2 பொண்ணுங்க இருக்காங்களேம்மா
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 08 - சசிரேகா
“மித்ராவும் உன்னை விரும்பினாதானே நல்லாயிருக்கும் எனக்காக அவள் இருந்தாலும் உன் கூட மனமொத்து வாழலைன்னு வையேன் உன் வாழ்க்கை நரகமாயிடும் அவளுக்கென்ன நீயில்லைன்னா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவா, அவளை நினைச்சி நீ ஏமாந்து நிக்காத, பெரிசா அவள் மேல ஆசை வைக்காத, ஒரு முறை அன்பாவும் அடுத்த நிமிஷம்
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 09 - சசிரேகா
”மித்ரா நாங்க இருக்கறப்ப அது எப்படி நீ யாருமில்லாதவளாயிடுவ, அடுத்தவங்க உன்னை பரிதாபமா பார்க்கறது அப்புறம் நீயே உன்னை பரிதாபமா காட்டக் கூடாது, யாருமில்லைன்னாலும் யாரோ இருக்கறதா நினைச்சிக்கனும், கடவுள் இருக்காரு எல்லாருக்கும், அவர்தான் முதல் உறவு அதை மறந்துடாத” என செல்வராசன் சொல்ல மித்ராவோ பலமாக
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 10 - சசிரேகா
அது நாள் வரை மித்ராவை தோழியாக பார்த்தவன் அவளே நட்பு வேண்டாம் என சொன்னதும் அவளை வேறு கோணத்தில் பார்த்தான். அப்போதுதான் அவளை தனக்காக தனக்குரியவளாக பார்க்க தோணியது அவனுக்கு. மாயாவிடமும் தேனிடமும் ஏன் எந்த பெண்ணிடமும் ஏற்படாத ஒரு உணர்வு அவளிடம் அப்போது தோண்றவே அந்த புதிய உணர்வை வெகுவாக
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 11 - சசிரேகா
”மித்ரா என்னை அன்பா அப்பான்னும் என் மனைவியை அம்மான்னும் கூப்பிடறா, காலையில அவள் கூட பேசினதில ஒரு விசயம் புரிஞ்சிக்கிட்டேன் இந்த ஊர்ல ஏதோ வேலை விசயமா வந்தாளாம், தனியா இருக்காளாம் அம்மா அப்பா யாருமில்லையாம் பாசத்துக்காக ஏங்கறேன்னு சொன்னா, எங்களுக்கும் பெரிசா யாரும் இல்லை நீ இங்கேயே இருந்துடுன்னு
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 12 - சசிரேகா
அங்க என் ஊர்ல என் அம்மா உனக்காக காத்துக்கிட்டு இருக்காங்க, நீ வந்தன்னா உன்னை நான் கூட்டிட்டு போயிடுவேன், நீ என்னடான்னா இங்கயே இருக்கேங்கற கொஞ்சம் யோசி அந்த ஸ்ரீதர் பத்தி எனக்கு தெரியலை அவனை அடிச்சாலே அப்புறம் உன் பக்கம் அவன் வரமாட்டான் ஆனா தனஞ்செய் அப்படியில்லை. பெரிய பிசனஸ்மேன் அவன் நினைச்சா
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 13 - சசிரேகா
இளாவும் தனக்கான வாழ்க்கை தனக்கு கிடைத்துவிட்டது தாயின் வாக்கும் நிறைவேறிவிட்டது என நினைத்து நிம்மதியாக மித்ராவை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு சென்னையை நோக்கி புது வாழ்க்கையை உருவாக்க பயணப்பட்டான். அவன் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மனதிலோ ஜெயந்தியின் நினைப்பு
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 14 - சசிரேகா
”நான் சொன்ன திட்டப்படி தற்கொலை செஞ்சிக்கிட்ட மாதிரி ஜெய்யும் நாடகமாடி 5 நாளா ஆஸ்பிட்டல்ல பொய்யான கட்டு கட்டி உட்கார்ந்துக்கிட்டு இருக்கான். அவனும் இளாவைதான் மலை போல நம்பியிருக்கான் அவனோட நம்பிக்கையும் என்னோட நம்பிக்கையையும் கெட்டுப் போக கூடாது எப்படியாவது மாயா ஜெய்யோட சேரனும் இளா
... -
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 15 - சசிரேகா
”இளா எனக்குன்னு இருக்கறது நீ மட்டும்தான், இத்தனை வருஷம்தான் உன்னை கஷ்டப்படுத்தி பார்த்துட்டாரு என் அப்பா, மாயா அப்புறம் தேன்மொழியால நீ மனசு உடைஞ்சி போயிட்ட, உன் பிறந்தநாள் அன்னிக்கு மித்ரா வந்தப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன் உனக்காகதான் அவள் வந்தாள்ன்னும், நீயும் அவளை விரும்பறேன்னும். அவள்
...