“இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. ஏன் இந்த கல்யாணம் வேண்டாம் என்பதற்கு உண்மையான காரணத்தை சொல்லு.. ஏன் என்னை பிடிக்கலையா?? “ என்றவன் ஏதோ நினைவு வரவும்
“ஓ .. உன் ஆருயிர் காதலனை பிரிய முடியலயா?? அப்படி உன் காதல் உண்மைனா இந்த மாதிரி அடுத்தவன் குழந்தைய சுமக்க வந்திருக்க கூடாது.. சொல்லு டீ.. என்ன அவன்தான் வேண்டாம்னு சொன்னானா?? “ என்று அவளை பிடித்து உலுக்கினான்.. இதுவரை அவன் பேசிய பேச்சுக்களை கேட்டு சிலையாக நின்றவள் அவன் உலுக்கவும் சிலைக்கு உயிர் வந்ததை போல கண்ணை திறந்து அவனை எரித்து விடுவதை போல பார்த்தாள்.. பின் ஏதோ யோசித்தவள் ..
“ஆமா .. எனக்கு உங்களை பிடிக்கலை.. அதுவும் ஏற்கனவே ஒருத்தியோடு வாழ்ந்தவனுக்கு இரண்டாம் தரமா என்னால வரமுடியாது.. நான் என் காதலனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த திருமணத்தை நீ மறுத்து இருக்கனா நீ தான் இத்தனை நாளா அவங்களை ஏமாத்தி இருக்க... ஏமாத்துக்காரி.. எங்கம்மா எப்படி ஒடிஞ்சு போய்ட்டாங்க தெரியுமா...அவங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கனும்... அதனால அவங்க ஆசை பட்ட மாதிரியே அடுத்த முகூர்த்ததுலயே நம்ம கல்யாணம்..ரெடியா இரு.. “என்றான் அதே கோபத்துடன்..