(Reading time: 30 - 60 minutes)

புரிஞ்சிக்கிட்டோம், அந்தவிதத்தில் நாம சாத்விக்கிற்கும் சேர்த்து துரோகம் செய்யல.. அப்படி நினைச்சு தான் கொஞ்சம் நிம்மதியை தேடிக்கிட்டேன்..

ஆனா திரும்ப 5 வருஷம் கழிச்சு உன்னை சந்திச்சப்போ, அதுவும் உண்மையில்லையான்னு நினைச்சு தான் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு சாத்விக், அதான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்..

இப்போ உன்கிட்ட நான் சொன்ன உண்மை உனக்கு வருத்தத்தை கூட கொடுக்கலாம், ஆனா அதை சொல்லி தெளிவுப்படுத்த வேண்டியது என் கடமை இல்லையா? இப்போ என்னைப் பற்றி உண்மை தெரிஞ்சிக்கிட்டவங்கல்லாம் ஒன்னு தான் நினைப்பாங்க.. நான் உன்னை காதலிச்சேன், ஆனா அந்த நிறைவேறாம எனக்கு கல்யாணம் நடந்தப்பட்சத்தில் நான் விபுவோட தான் வாழ்ந்திருக்கணும், ஆனா அப்போ உன்னை தேடி வந்தது தப்பு..

அந்த தப்பை துணிந்து செய்துட்டேன் தான், அதனால் இத்தனை காலம் யாரையும் பார்க்காம ஒதுங்கி வாழ்ந்தேன், இப்போ என்னை நீங்க பார்த்ததும் இப்போ நான் ஒரு முடிவெடுத்தாகணும், ஒன்னு காதலிச்சவனுக்காக தானே வீட்டை விட்டு ஓடி வந்தேன், அதனால் நடந்த கல்யாணத்துக்கு அர்த்தமே இல்லாதப்ப, அதிலிருந்து மொத்தமா விடுதலை வாங்கிட்டு வந்து காதலிச்ச உன்னையே கல்யாணம் செஞ்சுக்கணும்,

இல்ல என்ன இருந்தாலும் எனக்கு விபுவோட கல்யாணம் முடிஞ்சிடுச்சு அதனால் மனசில் இருந்த காதலை மறந்திட்டு விபுவோட ஒழுங்கா வாழணும், இதில் ஏதாவது ஒன்னை நான் செய்யணும்னு எல்லோரும் எதிர்பார்ப்பாங்க.. நீ கூட நான் விபுவோட சந்தோஷமா வாழ என்னை விட்டு விலகி இருக்கணும்னு கூட முடிவெடுத்திருக்கலாம்,

ஆனா நான் நடந்த கல்யாணத்தை ஏத்துக்காம விபுவை விட்டு பிரிஞ்சா கூட உன்னை ஏத்துக்க முடியாது என்பது தான் உண்மை. ஏன்னா நான் உன்னை காதலிக்கல.. அதை நான் தெளிவா புரிஞ்சிக்கிட்டேன். இதை ஒவ்வொருத்தருக்கும் தனியா விளக்கணும்னு எனக்கு அவசியமில்ல, ஆனா விபுவுக்கும் உனக்கும் இது புரியணும், என் வாழ்க்கையில் விபு இருக்காரோ இல்லையோ ஆனா எப்போதும் என் வாழ்க்கையில் நீ இல்லை. அதை நீ புரிஞ்சிக்கணும்,

எதிர்காலத்தில் ஒருவேளை நான் கஷ்டப்பட்றது போல ஏதாச்சும் நடந்தா கூட, யாதவி என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருந்தா நான் அவளை சந்தோஷமா வச்சிருந்திருப்பேன், ஏன்னா அவ என்னை தானே காதலிச்சான்னு நீ நினைக்க கூடாது.. மத்தவங்க அப்படி பேசினாலும் அது தானே ஒருவிதத்தில் உண்மைன்னு நீ யோசிக்கக் கூடாது.. ஏன்னா அது உண்மை இல்லை, அதை சொல்ல தான் நான் உன்னை பார்க்க வந்தேன்.." என்று அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.