செய்தான். ஆனால் உள்ளூர மாறிக் கொண்டிருந்தான். நானும் வலியப்போய் அவனுடன் பேசுவதில்லை. அவன் ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வேன், அவ்வளவுதான். அவனுடைய உடல் முழுதும் ஒருத்திக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய மனமுந்தான். ஆனால் அவன் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் பேசியது வேறு. "நான் அவளை வெறுக்கிறேன். அவ ஒழுக்கங் கெட்டவ. அவ ஒரு தேவடியாதானே! பணம் வாங்கிக்காத தேவடியா! எனக்குத் தேவைப்பட்டா நேரடியா ஒரு தேவடியாகிட்டே போவேன். நான் இஷ்டப்பட்டவகிட்டே போவேன். காசு கொடுத்து அவளை அனுபவிப்பேன். நான் ஏன் சூரஜ்பான்கிட்டே போகணும்? நான் அவகிட்டே போனா அவ இஷ்டந்தான் ஜெயிக்கும். அவ விலைகொடுத்து என்னை அனுபவிப்பா. நான் என்ன ராணி பசந்தா?
இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பான் மேகர்பான். அவனுள்ளே ஒரு போர் நடந்த கொண்டிருந்தது. அவனுக்கு அமைதியில்லை. சுரஜ்பான் அவன் மனதைக் கவர்ந்துவிட்டாள் என்ற உண்மையை அவன் என்னிடம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாம் புரிந்திருந்தது. ஆனால், நான் புரிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"யாரும் உன்னை அவகிட்டே போகக் கட்டாயப்படுத்தலே.
நீ போகலேன்னா யாரும் ஒண்ணும் நினைச்சுக்கப் போறதில்லே. அவ எல்லாரையும் விருந்துக்கு அழைக்கற மாதிரி உன்னையும் அழைச்சிருக்கா. அவ தனக்கு யாரைப் பிடிச்சிருக்கு, யாரைப் பிடிக்கல்லேன்னு விளம்பரம் பண்றாளா? அதையெல்லாம் ஜாடை மாடையா உணர்த்திடுவா. அவ தனக்குப் பிடிச்ச ஆளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லுவா. அங்கே அவளோட கார் வந்து அவனைக் கூட்டிக்கிட்டுப் போகும். யாரும் அதைக் கவனிக்க மாட்டாங்க. அப்புறம் அவனை இன்னொரு இடத்திலே இறக்கி விட்டுடுவா..." என்று நான் சொன்னேன்.
"மோசக்காரி! முண்டை! ராட்சசி! பிசாசு!" என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் அவன்.
"நீ ஏன் இப்படி அசிங்கமாத் திட்டறே அவளை? அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணினா? நீ